பொன்னேரி அருகே கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை

" alt="" aria-hidden="true" />

பொன்னேரி, 

 

பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி என்கிற காளியம்மன் சித்தகண்ணீஸ்வர சாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர்களால் அமைக்கப்பட்டது.

 

16-ம் நூற்றாண்டில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்து வந்தபோது மொகலாய படைகளால் தடுத்து நிறுத்தியபோதும், மீறி சென்று வெற்றி வாகை சூடி கொண்டபோது காளியம்மன் காட்சி அளித்த இடத்தில் தங்கினார்.



 


பின்னர் அந்த இடத்தில் கருங்கற்களால் ஆன திருக்குளத்தை அமைத்து காளியம்மனுக்கு பூஜை செய்ததாகவும் இதனை மாவீரன் சத்ரபதி சிவாஜி இந்த குளத்தில் நீராடிவிட்டு சென்று போர் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

இந்த நிலையில் கடந்த 4 நூற்றாண்டுகளாக சிறப்பு பெற்றிருந்த இந்த குளத்தில் சம அளவில் இருந்த கருங்கற்கள் சிதலம் அடைந்து காணப்படுகிறது.

 

இந்த கோவில் திருக்குளத்தை பழமை மாறாமல் தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஆழப்படுத்த வேண்டும்.

 

சிதிலம் அடைந்துள்ள திருக்குளத்தை சுற்றுச்சுவர் அமைத்து, சீரமைத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.





Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image