காஞ்சீபுரம், நலத்திட்ட உதவிகள்

" alt="" aria-hidden="true" />


உத்திரமேரூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம், சைக்கிள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.தர்மன், தங்க பஞ்சாட்சரம், பிரகாஷ் பாபு, மாவட்ட அவைத்தலைவர் குணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




இதையடுத்து மேனலூர் கிராமத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தியதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உத்திரமேரூரை அடுத்த காரணிமண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுககு இனிப்புகள் வழங்கியதுடன், பயனாளிகளுக்கு சைக்கிள் மற்றும் தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

இதில் எ.பி.சத்திரம் பெருமாள் மற்றும் மேனலூர் பெருமாள் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்தநிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, கூட்டுறவு கடன்சங்க தலைவர் எம்.கே.பி.வேலு, மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெய், நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Popular posts
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image